Wednesday, June 7, 2023
Home தமிழகம் தொடர் மழையால் இடிந்து விழுந்த மண் சுவர் - உறங்கிக்கொண்டிருந்த முதிய தம்பதி பலி

தொடர் மழையால் இடிந்து விழுந்த மண் சுவர் – உறங்கிக்கொண்டிருந்த முதிய தம்பதி பலி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராங்கத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம் (80). இவர் மனைவி செந்தாமரை (72). இந்த முதிய தம்பதி நேற்றிரவு, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, தொடர் மழை காரணமாக அவர்களின் வீட்டு மண் சுவர் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. அதில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் – மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் தம்பதி உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில், முதிய தம்பதியின் பேத்தி இன்று காலை இருவருக்கும் டீ கொடுப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது, வீட்டின் சுவர் இடிந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார். பின்னர், இடிந்து கிடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கணவன் – மனைவி இருவரும் மண் சுவர் விழுந்து இறந்து கிடந்தனர். அதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்தாமூர் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments