Wednesday, May 24, 2023
Home பொது ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் SBI வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு

ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் SBI வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு

ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஷார்ட்ஸ் அணிந்து வந்திருந்ததால், வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு வங்கிக் கிளை அனுமதி மறுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது

பள்ளி, கல்லூரிகள், கோயில்க்ச்ளில், அலுவலகங்களில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் வந்து செல்லும் வங்கிக் கிளைகளில் பொதுவாக ஆடைக் கட்டுப்பாடு குறித்து இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் வங்கிக்கு சென்றபோது ஆடைக் கட்டுப்பாடு இருப்பதாக கூறி வேறு ஆடை அணிந்து வருமாறு வங்கிக் கிளை ஊழியர் ஒருவர் தன்னை வற்புறுத்தியதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்ற ஆஷிஷ் என்ற வாடிக்கையாளர், தான் ஷார்ட்ஸ் அணிந்து சென்றதாகவும், அப்போது வாடிக்கையாளர்கள் இப்படி அரைக்கால் சட்டை அணிந்து வருவது நாகரீகம் கிடையாது என்பதால் முழுக்கால் சட்டை அணிந்து வங்கிக்கு வருமாறு என்னிடம் வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இது போல வாடிக்கையாளர்கள் என்ன ஆடை அணிய வேண்டும், என்ன ஆடை அணியக் கூடாது என வரையறுக்கும் விதமாக அலுவலக ரீதியான கொள்ளைகள் ஏதேனும் உள்ளனவா?” என ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சமூக வலைத்தளத்தில் விரைவாகவே ஆஷிஷின் பதிவு வைரலாக மாறியதுடன், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவந்தனர். இந்த விவகாரம் புதிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை பிரிவினர் ஆஷிஷின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்தனர்.

அதில், உங்களுடைய பிரச்னையை புரிந்துகொண்டோம். அதனை மதிக்கிறோம். இதனை ஒரு வாய்பாக கருதி உங்களுக்கு விளக்கம் தர விரும்புகிறோம், அப்படி கூறுவது போல வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக ஆடைக்கட்டுப்பாடு எதுவும் எஸ்.பி.ஐக்கு இல்லை. பொது இடத்துக்கு எப்படி செல்வோமோ அப்படி செல்ல வேண்டும் மேலும் உள்ளூர் அளவிலான ஏற்றுக்கொள்ளும்ப்படியான ஆடைகளை அணிந்து வரலாம் எனவும், சம்பந்தப்பட்ட வங்கி கிளையின் கிளை எண் மற்றும் பெயரை தெரிவியுங்கள். என்ன என பார்த்து சொல்லுகிறோம் என தெரிவித்திருந்தனர்.

இதனிடையே எஸ்பிஐ வங்கி கிளை மீது புகார் தெரிவித்த ஆஷிஷ் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், என்னுடைய வீட்டுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை மேலாளர் ஜாய் சக்கரபோர்த்தி வந்திருக்கிறார். அவர் என் வீட்டுக்கே வந்து எனது பிரச்னையை சரி செய்து தருவதாக உறுதியளித்திருக்கிறார். எனவே வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை. இந்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments