Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு

பொதுப்பணித்துறையில் வேலூர் மாவட்ட தொழில் நுட்ப கல்வி பிரிவு செயல் பொறியாளராக பணியாற்றி வரும் ஷோபனா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3ஆம் தேதி சோதனை நடத்தினர் அப்போது 2.27 கோடி ரூபாய் ரொக்கம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பினாமி பெயரில் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் சோபனா திடீரென பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மண்டல பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments