Friday, September 29, 2023
Home தமிழகம் பூட்டை அணைகட்டில் மீன் பிடிக்க சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு

பூட்டை அணைகட்டில் மீன் பிடிக்க சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை அணைகட்டில் மீன் பிடிக்க சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தை சேர்ந்த 10 பேர் நேற்று பூட்டை அணைக்கட்டு பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்து கொண்டிருந்தபோது கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், மீன் பிடிக்க சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புவீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரில் சிக்கிய 10 பேரையும் கயிற்றின் முலம் பாதுகாப்பாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments