Friday, September 29, 2023
Home தமிழகம் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி, தமிழ்நாட்டில் லுங்கி - தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர...

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி, தமிழ்நாட்டில் லுங்கி – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி வளர்த்து செல்வதும்,தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் லுங்கி அணிந்து செல்வதும் வளர்ச்சியை தருமா?

ஆடைகளை மாற்றி மாற்றி அணிவதால் நாடு வளர்ச்சியடையப் போகிறதா?

மத்தியில் ஆளும் காவி கட்சியை அகற்றி வங்காள விரிகுடாவில் வீச அழைப்பு விடுக்கிறேன். நாட்டுக்கு எது தேவையோ அதை நாம் செய்வோம், அமைதியாக உட்கார மாட்டேன்.

விவசாயிகள், எளிய மக்களை ஏமாற்றிய கோல்மால் பட்ஜெட் ஆக உள்ளது. இது மக்களுக்கு செய்யும் துரோகம்.

இந்த நாட்டிற்கு இவ்வளவு குறுகிய பார்வை உள்ள பிரதமர், இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட அரசு இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார்.

பாஜக மற்றும் காங்கிரசை தாக்கிய சந்திரசேகர ராவ், இரு தேசியக் கட்சிகளும் நாட்டின் திறனை உணரத் தவறிவிட்டன என்று கூறினார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments