Sunday, March 26, 2023
Home தமிழகம் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி, தமிழ்நாட்டில் லுங்கி - தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர...

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி, தமிழ்நாட்டில் லுங்கி – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி வளர்த்து செல்வதும்,தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் லுங்கி அணிந்து செல்வதும் வளர்ச்சியை தருமா?

ஆடைகளை மாற்றி மாற்றி அணிவதால் நாடு வளர்ச்சியடையப் போகிறதா?

மத்தியில் ஆளும் காவி கட்சியை அகற்றி வங்காள விரிகுடாவில் வீச அழைப்பு விடுக்கிறேன். நாட்டுக்கு எது தேவையோ அதை நாம் செய்வோம், அமைதியாக உட்கார மாட்டேன்.

விவசாயிகள், எளிய மக்களை ஏமாற்றிய கோல்மால் பட்ஜெட் ஆக உள்ளது. இது மக்களுக்கு செய்யும் துரோகம்.

இந்த நாட்டிற்கு இவ்வளவு குறுகிய பார்வை உள்ள பிரதமர், இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட அரசு இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார்.

பாஜக மற்றும் காங்கிரசை தாக்கிய சந்திரசேகர ராவ், இரு தேசியக் கட்சிகளும் நாட்டின் திறனை உணரத் தவறிவிட்டன என்று கூறினார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments