இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளேன்
மதமாற்ற முயற்சி நடக்கிறது என்ற பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கிறித்தவ கல்வி நிறுவனங்களை அச்சுறுத்துகின்றனர். இது தொடர்பாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் விசாரிக்க வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன். அதன் விவரம் :
SC, ST மற்றும் OBC மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடுபடும் கிறித்தவ கல்வி நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள உதிரிக் குழுக்களால் “கட்டாய மதமாற்றம்” என்ற பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பின்னால் கல்வி வியாபாரத்தில் திளைக்கும் கல்வி மாஃபியாக்களின் சதி இருக்கலாம். இது குறித்து விசாரிக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையம் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும்”
இவ்வாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.