இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் வந்தால் விமான நிலையத்துக்குள் அனுமதி இல்லை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் பயணிகள் பயண நேரம் முழுவதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.