Thursday, December 7, 2023
Home உலகம் 30 முறை அதிர்ந்த பூமி - உருக்குலைந்த துருக்கி, சிரியா

30 முறை அதிர்ந்த பூமி – உருக்குலைந்த துருக்கி, சிரியா

துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் 30 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். தொடர் நில அதிர்வுகளால் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

தெற்கு மத்திய துருக்கி மற்றும் வட சிரியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 என்ற ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், அடுத்த நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த 1,600 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 30 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்து இருக்கிறது. ரிக்டரில் 4 என்ற அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் நிலையம் கூறியுள்ளது. இந்த தொடர் நில அதிர்வுகளால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது வழக்கம். இதன் பெயர் ஆஃப்டர் ஷாக் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இது சில மணி நேரங்கள், நில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள், சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் என்று கூறப்படுகிறது.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments