Saturday, June 3, 2023
Home இந்தியா அனைவருக்கும் வீடு “லைஃப்” திட்டத்தை உறுதி செய்து கேரள LDF அரசு சாதனை

அனைவருக்கும் வீடு “லைஃப்” திட்டத்தை உறுதி செய்து கேரள LDF அரசு சாதனை

“லைஃப்” திட்டத்தில் 4 அடுக்குமாடி வீடுகள் மேலும் 174 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. கேரள அரசால் கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி வீட்டு வளாகங்களில் நிலமற்ற, வீடில்லாத 174 குடும்பங்களுக்கு வீடு வழங்கும் விழாவை முதலமைச்சர் பினராயி விஜயன் ஏப்.8ந் தேதி தொடங்கி வைத்தார்.

கடுமையான வறுமை இல்லாத மாநிலமான கேரளத்தில் அனைவருக்கும் சொந்த வீடு கனவு நனவாகும் என்று அப்போது முதல்வர் கூறினார்.

கடம்பூர் தவிர, கொல்லம் மாவட்டம் புனலூர், கோட்டயம் மாவட்டம் விஜயபுரம், இடுக்கி மாவட்டம் கரிமன்னூர் ஆகிய இடங்களில் குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டிய 100 நாள் செயல் திட்டத்தின் படி இந்த வீட்டுத் தொகுப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு முன் அறை, இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணூர் மாவட்டம் கடம்பூரில் மட்டும் 44 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கிடைத்துள்ளன. கடம்பூரில் 44 பயனாளிகளுக்கு சாவியை முதலமைச்சர் வழங்கினார்.

விழாவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் தலைமை வகித்தார். புனலூரில் அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், ஜெ. சிஞ்சுராணி ஆகியோர் சாவியை வழங்கினர். கோட்டயம் விஜயபுரத்தில் அமைச்சர் வி.என்.வாசவனும், இடுக்கி கரிமண்ணூரில் அமைச்சர் ரோஷி அகஸ்டினும் பயனாளிகளிடம் சாவிகள் வழங்கினர்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments