Thursday, December 7, 2023
Home இந்தியா அனைவருக்கும் வீடு “லைஃப்” திட்டத்தை உறுதி செய்து கேரள LDF அரசு சாதனை

அனைவருக்கும் வீடு “லைஃப்” திட்டத்தை உறுதி செய்து கேரள LDF அரசு சாதனை

“லைஃப்” திட்டத்தில் 4 அடுக்குமாடி வீடுகள் மேலும் 174 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. கேரள அரசால் கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி வீட்டு வளாகங்களில் நிலமற்ற, வீடில்லாத 174 குடும்பங்களுக்கு வீடு வழங்கும் விழாவை முதலமைச்சர் பினராயி விஜயன் ஏப்.8ந் தேதி தொடங்கி வைத்தார்.

கடுமையான வறுமை இல்லாத மாநிலமான கேரளத்தில் அனைவருக்கும் சொந்த வீடு கனவு நனவாகும் என்று அப்போது முதல்வர் கூறினார்.

கடம்பூர் தவிர, கொல்லம் மாவட்டம் புனலூர், கோட்டயம் மாவட்டம் விஜயபுரம், இடுக்கி மாவட்டம் கரிமன்னூர் ஆகிய இடங்களில் குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டிய 100 நாள் செயல் திட்டத்தின் படி இந்த வீட்டுத் தொகுப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு முன் அறை, இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணூர் மாவட்டம் கடம்பூரில் மட்டும் 44 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கிடைத்துள்ளன. கடம்பூரில் 44 பயனாளிகளுக்கு சாவியை முதலமைச்சர் வழங்கினார்.

விழாவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் தலைமை வகித்தார். புனலூரில் அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், ஜெ. சிஞ்சுராணி ஆகியோர் சாவியை வழங்கினர். கோட்டயம் விஜயபுரத்தில் அமைச்சர் வி.என்.வாசவனும், இடுக்கி கரிமண்ணூரில் அமைச்சர் ரோஷி அகஸ்டினும் பயனாளிகளிடம் சாவிகள் வழங்கினர்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments