நாகூர் – நாகை இடையே ஆட்டோ ஓட்டும் சாகுல் ஹமீது என்பவரின் ஆட்டோவிற்கு, வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீசார் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மனவருத்தமுற்ற சாகுல் ஹமீது, வாய்மேடு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை எஸ்பி யிடம் புகார் மனு அளித்துள்ளார். தனக்கு போடப்பட்ட அபராதத்தை ரத்து செய்யுமாறு ஆட்டோ ஓட்டுநர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.