Monday, December 4, 2023
Home தமிழகம் தமிழக முதல்வர் உத்தரவை மீறிய காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழக முதல்வர் உத்தரவை மீறிய காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழக காவல்துறையில் உள்ள காவலர் முதல் நுண்ணறிவு காவலர்கள் வரை வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் உயர் அதிகாரிகள் யாரும் கீழே இருக்கும் காவலர்களுக்கு விடுமுறை அளிப்பது கிடையாது, மேலும் சென்னை முழுவதும் உள்ள நுண்ணறிவு பிரிவு காவலர்களுக்கு இந்த விடுமுறை சுத்தமாக தருவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வடசென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கும் முயற்சி செய்தார். மேலும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் அப்பன் ராஜ் என்பவர் தன்னுடைய ஆய்வாளர் தனக்கு விடுமுறை அளிக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவலர்கள் குடும்பத்தார் கோரிக்கை மேலும் மன உளைச்சலில் உள்ள சில காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக இதற்கு தீர்வு காண போக்குவரத்து காவலர்கள் சட்டம் ஒழுங்கு காவலர்கள் மற்ற துறையும் சேர்ந்த காவலர்களும் தகவல் தெரிவிக்கின்றனர்

மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் காவலர்கள் பற்றாக்குறையால் விடுமுறை அளிக்கவில்லை என்று வாய்மொழியாக தெரிவிக்கின்றனர். காவல் நிலையங்களில் பற்றாக்குறையாக உள்ள காவலர்களை நிரப்பி காவலர் மன உளைச்சலை போக்கி விடுமுறை அளிக்க அனைத்து தரப்பினரும் கேட்டு வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments