Wednesday, May 8, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை விளக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசுக்கும், வங்கிகளுக்கும், பொது மக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும்.

ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வரும் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.

ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்த நிலையில், தகுதி உள்ளவர்களாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments