Monday, December 4, 2023
Home இந்தியா போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது...

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயது 18 ஆக உள்ளது. இதற்கும் குறைவான வயது உள்ள சிறுமிகளிடம் விருப்பத்துடன் அத்துமீறினாலும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பல்வேறு நாடுகளில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயது குறைக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவிலும் சம்மதத்துடன் பாலியல் உறவுக்கு அனுமதி அளிக்கும் வயதை குறைக்க பல்வேறு தரப்பிலும் இருந்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதுபற்றி ஒன்றிய அரசு சட்ட ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. இந்தநிலையில் ஒன்றிய அரசிடம் தற்போது இதுதொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் வழங்கி உள்ளது. அதில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பது நல்லதல்ல என்று கருத்து தெரிவித்து உள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான குழு வழங்கிய அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: போக்சோ சட்டத்தின் கீழ் தற்போதுள்ள சம்மதத்தின் வயதை குறைக்க வேண்டாம். ஏனெனில் பாலியல் சம்மத வயதை 18ல் இருந்து 16ஆக குறைத்தால் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் இளமைப் பருவ காதலை கட்டுப்படுத்த முடியாது. மேலும் குழந்தை கடத்தல், குழந்தைகளிடம் அத்துமீறல், குழந்தை விபசாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் வயது குறைத்தல் விருப்பத்தகாத நடவடிக்கை ஆகிவிடும். மாயம் தொடர்பான வழக்குகளில் குற்ற நோக்கத்தில் ஈடுபடுவது போன்ற வழக்குகளில் கூட நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இருப்பினும் நீதித்துறை பரிந்துரைப்படி மறைமுக ஒப்புதல் விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு சட்ட ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments