Thursday, January 23, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தோம் - மகளிர் ஆணைய உறுப்பினர்...

அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தோம் – மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்-அண்ணா பல்கலை.யில் 2வது நாள் விசாரணைக்கு பின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தகவல்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தோம்.

பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்தோம்.

தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து பேசினோம், விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிராக என்ன குற்றங்களை யார் செய்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

குற்றவாளி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும், எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள், அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments