ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது.
எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது.
சென்னையில்...
இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில்...
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், புதன்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் சரிவைச் சந்தித்ததை அடுத்துச் சென்செக்ஸ் குறியீட்டில் தொடர்ந்து 2வது நாளாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்ட நிறுவனமாக...
கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். உலகளவில்...
தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு:
வார நாட்கள் (திங்கள்...
கல்பாக்கம் அருகே கடற்கரையில் மிகப்பெரிய டால்பின் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியது.வனத்துறையினா் டால்பினை கடற்கரையோரம் புதைத்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள உய்யாலி குப்பம் மீனவா் குடியிருப்பு கடற்கரை பகுயில் இன்று காலை 9 மணியளவில் ஒரு டால்பின் இறந்த நிலையில் கரையொதுங்கி கிடந்தது.மீனவா்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.போலீசாா் வந்து பாாத்துவிட்டு வனத்துறையினருக்கு தெரிவித்தனா்.
செங்கல்பட்டு வனத்துறை ரேஞ்சா் D.பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறையினா் வந்து ஆய்வு செய்தனா்.அது சுமாா் 350 கிலோ எடையுடையது.3 மீட்டா் நீளமும் 2.5 மீட்டா் சுற்றளவும் உடையது.அதன் வயது சுமாா் 3 .
இதையடுத்து வனத்துறை மருத்துவா் கடற்கரைக்ககே வந்து டால்பினை பிரேத பரிசோதனை செய்தாா்.அதன்பின்பு நடுக்கடலில் கப்பலில் அடிப்பட்டு இந்த டால்பின் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவித்தாா்.
அதன்பின்பு உள்ளூா் மீனவா்கள் உதவியுடன் எா்த்முவா் மூலம் கடற்கறையோரம் மிகப்பெரிய பள்ளம் தோண்டி உயிரிழந்த டால்பின் உடலை புதைத்தனா்.
மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் 61 நாள்கள் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் வியாழக்கிழமை (ஏப். 15) தொடங்குகிறது.
ஏப்ரல், மே மாதங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, மீன் இனம் அடியோடு அழிந்து விடும்.
மீன் இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி நிகழாண்டு, தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியான கன்னியாகுமரி கடல் பகுதி முதல் சென்னை திருவள்ளூா் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றம் இழுவைப் படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடற்கரையோரங்களில் ஃபைபர் மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கத் தடையில்லை.
மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால்,...
இலங்கை
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள அல்டெயார் (Altair) அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.
68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் 230 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.
சூரிச் மாநிலத்தின் மத்தியில் உள்ள தமிழ் வர்த்தகரின் சில்லறை கடையில் நாசிகள் என்று அடையாளமிடப்பட்டு வர்த்தகரை கடையினுள் வைத்து எரிப்பதாகவும் அவரது குழந்தைகள் தொடர்பிலும் அவரின் கடை கதவுகளில் வாசகங்கள் எழுதி மிரட்டல் விடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கடமையின் உரிமையாளர் இவ்விடயத்தை காவல்துறையினர் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுபோன்ற விடயங்களை சிங்களவர்கள் யாரும் செய்திருக்கலாம் என கருதுகின்றனர். சுவிஸில் வர்த்தக ரீதியில் தமிழர்கள் அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளமை யாவரும் அறிந்த விடயம்.
அதுமட்டுமல்லாமல் தொழில் ரீதியில் ஐரோப்பியாவில் தமிழர்கள் அதிக அளவில் பல துறை சார்ந்த தொழில்கள் செய்கின்றமை அங்குள்ள அரசுகளையே உயர்வாக பார்க்க செய்துள்ளது. இப்படியான நிலையில் இவ்வகையான மிரட்டல்கள் பல்வேறு கோனங்களில் பார்க்கப்படுகின்றது.
உதாரணமாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் அங்கு புலம்ப்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகம், அதில் ஈழத்தமிழர்களின் நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்று...
இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இலங்கை தமிழர்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வு அவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார்.
சென்னை
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியன்-2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவாகி உள்ளது. ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருக்கிறோம். இந்தியன்-2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி...
அஷ்வத் மாரிமுத்து டைரக்ஷனில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் "ஓ மை கடவுளே". ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஸ்வாக் சென் நடிக்க படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தி ரீமேக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்டமால் சைன் இந்தியா, மெர்ரி கோ ரவுண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. "ஓ மை கடவுளே" இந்தி ரீமேக்கையும் அஷ்வத் மாரிமுத்துவே டைரக்ட் செய்ய...
புதுச்சேரி
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவை அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக கொரோனா போர் அறையின் மூலம் செயல் திட்டங்கள் தீட்டப்பட்டது. இந்த செயல் திட்டங்களை தற்போது காரைக்காலில் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலர் அன்பரசு தலைமையிலான அதிகாரிகள் காரைக்காலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின் விவாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் காரைக்கால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், நோய் தொற்று குறைந்த பகுதியாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா பரிசோதனையை 500-ல் இருந்து 1000 ஆக உயர்த்திடவும், அதனை தனியார் மருத்துவக்கல்லூரி ஒத்துழைப்புடன் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது.
அங்கு 24 மணி நேரமும்...
புதுச்சேரி
திருநள்ளாறு கோவிலில் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறையை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்துவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
கடந்தாண்டு சனிப்பெயர்ச்சியின் போது 1.5 லட்சம் பேர் தரிசித்த நிலையில் இந்தாண்டு 12,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர் என கூறினார். வருவாய் குறைந்தாலும், பக்தர்கள் சிரமத்தை கருத்தில் கொண்டும் ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது.
அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தேவஸ்தான நிர்வாகம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.
ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது.
எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இருந்து நீங்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ரூ.3000 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப் பொருள்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இந்திய கடற்படை கப்பல் சுவர்ணா, அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகிக்கும் வகையில் சென்றுக் கொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டது. அப்போது அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அடுத்தகட்ட விசாரணைக்காக, அந்தப் படகு அருகில் உள்ள கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிடிபட்ட போதைப் பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, மிகப்பெரிய அளவு - விலை மதிப்புள்ள பறிமுதல் நடவடிக்கை மட்டுமல்ல; மக்ராவ் கடற்கரையிலிருந்து இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருள்களை கடத்தி செல்லும் சட்டவிரோத வழித்தடத்தை சீர்குலைக்கும் செயலிலும் இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்
ஹரித்வார்
ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்ட 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் போலீசார் திணறிவருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1ம் தேதி முதல் கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி வரை கும்ப மேளா நடைபெற உள்ள நிலையில், கடந்த 12, 14 (இன்று) மற்றும் 27ம் ஆகிய தேதிகளில் புனித நீராடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதனால், ஏராளமான பொதுமக்கள், துறவிகள் மற்றும் அகோரிகள் ஹரித்வாரில் புனித நீராட குவிந்துள்ளனர். இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கும்பமேளாவில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கும்ப மேளாவிற்கு வரும் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொடர்ந்து அலட்சியாக ஹரித்வாரில் குவிகின்றனர். குறிப்பாக...
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா கெடுபிடிகளை சமாளிக்க மூன்று பரிந்துரைகளை சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இதனை சரிசெய்ய உற்பத்தியை அதிகரிப்பதோடு, புதிய தடுப்பு மருந்துகளுக்கான அனுமதியை தாமதமின்றி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும், ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதால், ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியில் மீண்டும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ள சோனியா,
இதற்கு தீர்வு காணும் வகையில், ஏழை - எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27.02 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,702,255 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 122,351,771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 98,642,042 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 89,108 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26.11 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,611,510 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 117,735,410 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 93,398,644 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 89,858 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபிடாவ்,
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் கடந்த 4 வாரங்களாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மக்களின் போராட்டத்தை முறியடிப்பதற்காக முக்கிய நகரங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
ஆனால் அதையும் மீறி யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது போராட்டக்காரர்களை விரட்டியடிக்க ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளாலும் சுட்டதால் பெரும் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின் போது ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதில்...
தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அர்ஜுனா விருது வென்றுள்ள இவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சென்னை
ஆஸ்திரேலியாவில் இருந்து சேலம் வரும் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க ஊர் மக்கள் திட்டமிட்ட நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை விட 33 ரக்னள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது.
6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அணியை சுந்தரும், தாக்கூரும் சரிவில் இருந்து மீட்டனர். அறிமுக போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்கடன் சுந்தர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஷர்துல் தாக்கூர் 67 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.
உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்காவிட்டால் தலைவலி, பசியின்மை, சரும பாதிப்பு, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சிலவகை பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன. அவைகளுள் ஏதாவது ஒன்றையாவது தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும். 80 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்தை மட்டுமே உள்ளடக்கிய பழங்களும் இருக்கின்றன.
பிளம்ஸ் பழம், 85 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்யும் வல்லமை கொண்டது.
ஆப்பிள் பழத்தில் 86 சதவீதம் நீர் சத்து இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
அவகொடா பழமும் 86 சதவீதம் நீர் சத்து நிறைந்தது. இது உடலில் திரவ நிலையை சீராக பராமரிக்க உதவி...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் பாதுகாக்கப்பட்ட மலை பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சந்தைகளில் ஆய்வு செய்தனர்.
அதன்படி சாந்தோம், மஸ்கான் சாவடி பகுதிகளில் சோதனை செய்தபோது, அங்கு பிறந்து சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். அத்துடன் ராயபுரத்தில் உள்ள அக்கு பஞ்சர் டாக்டர் முகமது ரமலி (வயது 56) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது மலை கிளி குஞ்சுகள் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இந்திய அரசால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ம் ஆண்டு முதல் மலை கிளிகள் பாதுகாப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. மலைபிரதேசங்களில் வாழும் கிளிகள், டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை குஞ்சு பொரிக்கும். இந்த கிளி குஞ்சுகளை மொத்த விற்பனையாளர்கள் எடுத்து வந்து ஒரு ஜோடி...
சென்னையில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து மயக்க மருந்து கொடுத்து பிச்சை எடுக்க பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகிறது. சாலை ஓரங்களில் இதுபோன்ற குழந்தைகளை மயக்கநிலையில் படுக்க வைத்து, நோய்வாய் பட்ட குழந்தைகளைப்போல காட்டி பிச்சை எடுக்கிறார்கள்.
சில பெண்கள் மயக்கமடைந்த குழந்தைகளை தங்களது குழந்தைகளைப் போல இடுப்பில் சுமந்தபடி, பசியால் வாடுவது போல காட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இது போன்ற கொடுமைகளை ஒழித்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போலீசார் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்கப்பட்டது. அந்த குழந்தைகளை, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்து, மறு வாழ்விற்கு வழிவகை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபோல சென்னையில் காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட...
தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.
ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன.
ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்...
இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது.