Tuesday, March 21, 2023
Home விளையாட்டு முதல் ஒருநாள் போட்டி: சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சி

முதல் ஒருநாள் போட்டி: சென்னையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

அடுத்து இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (15-ந் தேதி) நடக்கிறது.

பகல் – இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் இந்த ஒரு நாள் போட்டியை காண ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். டிக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

முதல் ஒரு நாள் போட் டிக்கான இரு அணி வீரர்களும் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து பஸ்களில் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் நட்சத்திர ஓட்டலில் இருந்து பஸ்சில் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தனர். காலை 9 மணி முதல் 12 மணி வரை பயிற்சியில் ஈடுபட்டனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments