Friday, September 29, 2023
Home விளையாட்டு சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றவுள்ள பெண் நடுவர்

சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றவுள்ள பெண் நடுவர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லக்‌ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார். சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் ஒருவர் பணியாற்றவுள்ளது இதுவே முதல்முறை.
 
டிசம்பர் 8 அன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு அமீரகம் – அமெரிக்கா இடையிலான சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் லக்‌ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார்.
 
இது லக்‌ஷ்மியின் இரண்டாவது சாதனையாகும். ஐசிசியின் சர்வதேச நடுவர் பட்டியலில் இடம்பிடித்த முதல் பெண் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார். 51 வயது லக்‌ஷ்மி, 2008-09-ல் உள்ளூர் மகளிர் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார். இதுவரை 3 மகளிர் ஒருநாள், 16 ஆடவர் டி20, 7 மகளிர் டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments