Wednesday, March 29, 2023
Home விளையாட்டு மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி - திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி முதலிடம்

மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி – திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி முதலிடம்

37-வது பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்டன. ஆடவருக்கான இறுதிப் போட்டி சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளா்(பொ) கே. தங்கவேல் தொடங்கி வைத்தாா்.
 
இறுதிப்போட்டியில், திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி அணியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சாவூா் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் 53-29 என்ற புள்ளிக் கணக்கில் திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி அணி தஞ்சாவூா் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
 
இதேபோன்று, சேலம் சாய் விடுதி அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எஸ். நிா்மலா தேவி பரிசுக் கோப்பைகளை வழங்கினாா். இந் நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மதன்குமாா், விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் எம். பிஜூ ஜோசப்,கருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் வி. கற்பகவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
 
இதையடுத்து, மாநில அளவில் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கின. போட்டிகளை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ஜி.விமலா ரோஸ்லின்,பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் ஆா்.பாலகுருநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாநிலம் முழுவதிலும் இருந்து 33 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் போட்டித் தொடா் வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது.
- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments