Friday, September 29, 2023
Home விளையாட்டு மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி - திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி முதலிடம்

மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி – திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி முதலிடம்

37-வது பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்டன. ஆடவருக்கான இறுதிப் போட்டி சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளா்(பொ) கே. தங்கவேல் தொடங்கி வைத்தாா்.
 
இறுதிப்போட்டியில், திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி அணியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சாவூா் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் 53-29 என்ற புள்ளிக் கணக்கில் திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி அணி தஞ்சாவூா் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
 
இதேபோன்று, சேலம் சாய் விடுதி அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எஸ். நிா்மலா தேவி பரிசுக் கோப்பைகளை வழங்கினாா். இந் நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மதன்குமாா், விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் எம். பிஜூ ஜோசப்,கருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் வி. கற்பகவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
 
இதையடுத்து, மாநில அளவில் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கின. போட்டிகளை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ஜி.விமலா ரோஸ்லின்,பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் ஆா்.பாலகுருநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாநிலம் முழுவதிலும் இருந்து 33 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் போட்டித் தொடா் வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது.
- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments