Monday, October 2, 2023
Home விளையாட்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – ரிஷப் பண்ட் விலகல்

புதுடெல்லி
 
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நேற்று  முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
 
முதலாவது  இந்திய அணி செய்தது. 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷப் பண்ட், 33 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் செய்யும் போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து பண்ட்-ன் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவர் லேசான காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் போது, ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்தார். 
 
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு பிறகு, அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ரிஷப் பண்ட் விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.
- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments