Friday, September 29, 2023
Home விளையாட்டு விராட் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது, 2019-ன் சிறந்த ஒருநாள்போட்டி வீரர் ரோகித் -...

விராட் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது, 2019-ன் சிறந்த ஒருநாள்போட்டி வீரர் ரோகித் – ஐசிசி

துபாய் 
 
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சிறப்பு  விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கான விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
அதில் 2019ம் ஆண்டில் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடியதாகவும், மனப்பாங்கை பாராட்டியும் இந்திய அணியின் கேப்டன் விராட்  கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகப்படுத்த வேண்டும் என சைகை செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய ஸ்மித்தை ரசிகர்கள் அவமதித்தபோது கோலி இவ்வாறு செய்கை செய்தார்.  மேலும் 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி தேர்வாகியுள்ளார். 
 
அதேபோல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டின் ஒருநாள் போட்டி அணியில் கோலி, சமி, ரோகித், குல்தீப் ஆகிய இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments