Tuesday, March 28, 2023
Home விளையாட்டு தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி

தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலியிடம் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி கூறியது:

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இதே உத்வேகத்துடன் தான் விளையாடுவேன். 2008ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன், வருடத்தில் 300 நாட்கள் கிரிக்கெட்டிற்காக நேரம் ஒதுக்கி கடினமான உழைப்புடன் விளையாடி வருகிறேன்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது இருக்கும் இதே உத்வேகத்துடன் தன்னால் திறம்பட விளையாட முடியும். வரவுள்ள இரண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் விளையாட அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், தன்னுடைய 34 அல்லது 35 வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறினார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments