Wednesday, June 7, 2023
Home விளையாட்டு மல்யுத்தம் சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

மல்யுத்தம் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் வியாழன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 67 கிலோ பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை நருஹா மட்சுயுகியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, பல்வேறு எடைப்பிரிவுகளில் புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றனர்.ஹரியானாவைச் சேர்ந்த ஆசு, ஹர்தீப், பஞ்சாப்பை சேர்ந்த அதித்யா குண்டூ ஆகியோர் வெங்கலம் வென்றனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம், இரண்டு தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சரிதா மோர், பிங்கி, நிர்மலாக தேவி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments