Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஇந்திய இரயில்வேயின் அவலம்.

இந்திய இரயில்வேயின் அவலம்.

இந்திய இரயில்வே மிக நவீனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் 90% இரயில்கள் மிக மோசமான நிலையில் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதை ஆராய்வதற்காக சில இரயில்களில் சென்ற எமது சிறப்பு நிருபர் தெரிவிப்பதாவது: 
 
சென்னையிலிருந்து கொல்கொத்தா வரை செல்லும் கோரோமண்டல் எக்ஸ்பிரஸ் இரயிலில் கழிவறைகள் மிக மோசமாக உள்ளது. அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாத இரயில்வே துறையை மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? 
 
பயணிகள் சிலர் கூறுகையில், இந்த இரயிலின் கழிவறையை பயன்படுத்துபவர்களுக்கு கட்டாயமாக பெரிய வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த இரயிலில் பயணம் செய்தவர்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எந்தவித பொறுப்பே இல்லாமல் செயல்படும் இரயில்வே ஊழியர்களால், கடுமையான தொற்று நோய் உருவாக வாய்ப்புள்ளது. இந்திய இரயில்வேயை தனியார் மயமாக்கினாலாவது நல்ல வழி பிறக்கிறதா என்று பாப்போம் என்றனர்.
 
இதையும் விட மோசமான ஒரு நிலை, மேற்கு வங்காளம், ஷாலிமார் நகரிலிருந்து புறப்பட்டு கேரளா வழியாக நகர்க்கோயில் சென்றடையும் குருதேவ் எக்ஸ்பிரஸ். 
 
குருதேவ் எக்ஸ்பிரஸ் இரயிலில் கழிவறையை பயன்படுத்துகிறவர்களுக்கு, கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள் வர அதிகபட்ச வாய்ப்புள்ளது. இந்த இரயிலில் இன்னொரு அவலம் என்னவென்றால், கொல்கொத்தாவிலிருந்து ஆந்திரா, கேரளா, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பயணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இருக்கையில் அமர்ந்தபடியே பீடி பிடிக்கிறார்கள். காவல் துறையினர் கோச்-ஐ கடந்து செல்லும்போது புகை பிடிப்பவர்களை செல்லமாக கண்டித்துவிட்டு சென்று விடுகிறார்கள். இது அவர்களுக்கு பூரண உரிமை கொடுப்பதாகத்தான் தெரிகிறது. 
 
இதையும் தாண்டி, 8 பேர் அமர வேண்டிய ஒரு கூபேயில் சராசரி 15 பேர் பயணம் செய்கிறார்கள். டிக்கெட் பரிசோதகர் இவற்றை கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பெண்கள் அடையும் பாதிப்புக்கு அளவே இல்லை.
 
இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments