Friday, September 29, 2023
Home சினிமா மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் - 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோகன்லால் பிரபு

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் – 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோகன்லால் பிரபு

டைரக்டர் பிரியதர்ஷன் டைரக்‌ஷனில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம், `காலாபாணி.’ மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படம், அது. இந்த படத்தை தமிழில், `சிறைச்சாலை’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிட்டார்.

25 ஆண்டுகளுக்குபின், மோகன்லாலும், பிரபுவும் `மரைக்காயர் அரபிக்கட லிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தையும் பிரியதர்ஷனே இயக்கி இருக்கிறார். தமிழில், `மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.

இந்த படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சுவாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். ஆண்டனி பெரும்பவூர் தயாரித்து இருக்கிறார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments