Tuesday, May 30, 2023
Home சினிமா ஷில்பா ஷெட்டி மீது நகை மோசடி புகார் - வெளிநாட்டு இந்தியர்

ஷில்பா ஷெட்டி மீது நகை மோசடி புகார் – வெளிநாட்டு இந்தியர்

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பிரபுதேவாவுக்கு இணையாக நடனம் ஆடி கவர்ந்தவர். தமிழில் நிறையப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

மீண்டும் இந்திக்கே திரும்பிச் சென்றார். ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தரா மீது வெளிநாட்டு வாழ் இந்தியவர் சச்சின் ஜோஷி என்பவர் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி அறிவித்த, ஐந்து வருடம் தவணை முறையில் பணம் கட்டினால் 5 வது வருடத்தில் ஒரு கிலோ தங்கம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்திருந்தேன். 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை பணம் செலுத்தி வந்தேன். 5 வருட முடிவில் தங்கம் பெறுவதற்காக வந்தபோது அவர் நடத்தி வந்த நிறுவனம் மூடப் பட்டிருக்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது அந்த நிறுவனத்திலிருந்து ஷில்பா ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் 18.58 லட்சம் கட்டினேன். என்னிடம் ஷில்பா ஷெட்டி நகை திட்டத்தில் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments