Sunday, December 3, 2023
Home சினிமா ஷில்பா ஷெட்டி மீது நகை மோசடி புகார் - வெளிநாட்டு இந்தியர்

ஷில்பா ஷெட்டி மீது நகை மோசடி புகார் – வெளிநாட்டு இந்தியர்

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பிரபுதேவாவுக்கு இணையாக நடனம் ஆடி கவர்ந்தவர். தமிழில் நிறையப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

மீண்டும் இந்திக்கே திரும்பிச் சென்றார். ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தரா மீது வெளிநாட்டு வாழ் இந்தியவர் சச்சின் ஜோஷி என்பவர் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி அறிவித்த, ஐந்து வருடம் தவணை முறையில் பணம் கட்டினால் 5 வது வருடத்தில் ஒரு கிலோ தங்கம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்திருந்தேன். 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை பணம் செலுத்தி வந்தேன். 5 வருட முடிவில் தங்கம் பெறுவதற்காக வந்தபோது அவர் நடத்தி வந்த நிறுவனம் மூடப் பட்டிருக்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது அந்த நிறுவனத்திலிருந்து ஷில்பா ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் 18.58 லட்சம் கட்டினேன். என்னிடம் ஷில்பா ஷெட்டி நகை திட்டத்தில் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments