Monday, November 27, 2023
Home ஆன்மீகம் 13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில்

13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில்

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். பழநிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து வடபழநி ஆண்டவனை வேண்டிச் சென்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நாளை தொடங்குகின்றன.

இதற்கு முன்பு கும்பாபிஷேகம் 2007-ம் ஆண்டு நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராகியுள்ளது, வடபழநி ஆண்டவர் திருக்கோயில். இதையொட்டி, கும்பாபிஷேகப் பணிகளுக்கான கோயில் பாலாலய விழா மார்ச் 11, 12 ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.

முதல்நாள் நிகழ்ச்சியாக, மார்ச் 11 புதன்கிழமையன்று காலை 9 மணி முதல் 11.30 மணிவரை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முதல்கால யாகபூஜைகள் தொடங்கி நடைபெறும். பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். இரவு 9.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.

மறுநாள் மார்ச் 12-ம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜைகள் நடைபெறும். அடுத்து காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பாலாலய பிரதிஷ்டை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அதையடுத்து காலை 9.15 மணிக்குத் திருப்பணிகள் தொடங்கப்பெறும். பாலாலய விழாவைக் காண்பதற்குத் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை காவல்துறையும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து அறநிலையத் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் த.மருதபிள்ளை பேசியது:

சென்னையின் புகழ்வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் நடைபெறுகிற பாலாலய விழாவை பக்தர்கள் வந்து சிறப்பித்து, வடபழநி ஆண்டவர் அருள்பெற்றுச் செல்ல வேண்டும். திருப்பணிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்றார்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments