Saturday, March 25, 2023
Home விளையாட்டு இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

அம்மான்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாஷ்சை சந்திக்க இருந்தார்.

அரைஇறுதிசுற்றின் போது இடது கண் இமை பகுதியில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜியாத் இஷாஷ் களம் இறங்காமலேயே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விகாஸ் கிருஷ்ணன் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.

63 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 4-1 என்ற கணக்கில் கடந்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஹாரிசன் கார்சிட்டை சாய்த்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் முந்தைய காமன்வெல்த் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். 81 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்தியாவின் சச்சின் குமார் 0-5 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் ஷப்போஸ் நெக்மதுல்லோவிடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை கோட்டை விட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டையில் இதுவரை இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோ) ஆகிய 9 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் இருந்து குத்துச்சண்டையில் ஒரு ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு 8 இந்தியர்கள் தகுதி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments