Saturday, March 25, 2023
Home உலகம் ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்திரம் தலைமையில் வந்திருந்த கன்னியாகுமரி கோட்டாறு மறைமாவட்டக் குழுவினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் ஜெய்சங்கரையும், இணையமைச்சர் முரளிதரனையும் இக்குழுவினர் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

பின்னர் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 592 மீனவர்கள் ஈரான் நாட்டில் தொழில் செய்வதற்காக சென்றிருந்தனர். அங்கு தற்போது கரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் மூன்று தீவுகளில் தங்கியுள்ளனர். அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையொட்டி, மீனவர்களது கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் குழுவினர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து பேச வந்தோம். இந்தியா திரும்ப இயலாமல் இருக்கும் தமிழக மீனவர்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை வைத்தோம். ஈரானில் உள்ள மீனவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments