Friday, September 29, 2023
Home உலகம் ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்திரம் தலைமையில் வந்திருந்த கன்னியாகுமரி கோட்டாறு மறைமாவட்டக் குழுவினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் ஜெய்சங்கரையும், இணையமைச்சர் முரளிதரனையும் இக்குழுவினர் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

பின்னர் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 592 மீனவர்கள் ஈரான் நாட்டில் தொழில் செய்வதற்காக சென்றிருந்தனர். அங்கு தற்போது கரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் மூன்று தீவுகளில் தங்கியுள்ளனர். அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையொட்டி, மீனவர்களது கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் குழுவினர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து பேச வந்தோம். இந்தியா திரும்ப இயலாமல் இருக்கும் தமிழக மீனவர்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை வைத்தோம். ஈரானில் உள்ள மீனவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments