ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா பீதியில் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் போட்டி நடைபெற்றால் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.