Tuesday, October 3, 2023
Home விளையாட்டு ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் - பிராட் ஹாக்

ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் – பிராட் ஹாக்

சிட்னி

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பல வீரர்கள் இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த வீரராலும் இரட்டைசதம் அடிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிரஞ்ச், கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்த போதிலும் அவரால் இரட்டை சதத்தை எட்டமுடியவில்லை. அதேபோல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். ஆனால் அவரால் இரட்டை சதத்தை தொடமுடியவில்லை.

இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்க போகும் வீரர் யார், அவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருப்பார்? என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘என்னை பொறுத்தவரை தற்போதையை வீரர்களில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் தகுதி படைத்த வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா மட்டும் தான். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். எல்லா நேரங்களிலும் பெரிய ஷாட்டுகள் அடிப்பதில் வல்லவராக இருக்கிறார். பலவிதமான ஷாட்டுகள் மூலம் மைதானத்தின் எல்லா புறங்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாசுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 2017-ம் ஆண்டு இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்தார். அவர் இதுவரை 108 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2,773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments