Friday, May 26, 2023
Home இந்தியா தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன

தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன

கெரான் பகுதி கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதக் குழுவிற்கும் இந்திய ராணுவ படைகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் மறைவிடத்தில் சோதனை போது, பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட  உணவுப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ். ராஜு இதனை தெரிவித்தார்.

தீவிரவாதிகள் ஷம்சபரி எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், போஸ்வால் பகுதியில் உள்ள “குஜ்ஜர் தோக்” (நாடோடிகளுக்கு தற்காலிக தங்குமிடம்) என்ற இடத்தில் பதுங்கி இருந்ததாகவும் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments