Tuesday, April 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரையில், 881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் இயங்கி வரும் ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 பேர் கேரளாவில் இருந்து மும்பை சென்று தங்கி பணியாற்றிய செவிலியர்கள். மும்பையில் உள்ள அந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரிடம் இருந்து செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 150 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தாராவியில் குடியிருந்து, இந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments