Monday, December 4, 2023
Home இந்தியா எந்தவித அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா - மருத்துவ கவுன்சில்

எந்தவித அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா – மருத்துவ கவுன்சில்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தொற்று உறுதிசெய்யப்படும் பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற  எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை எனவும், இது கவலை அளிக்கக்கூடிய தகவல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த நிலை கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணமாக அமைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக தொற்று என்ற நிலையை எட்டிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments