Sunday, October 1, 2023
Home ஆன்மீகம் ஜோதிடர் பேஜன் தருவாலா மரணம் - மே -15 ம் தேதியுடன் கொரோனா நாட்டை விட்டு...

ஜோதிடர் பேஜன் தருவாலா மரணம் – மே -15 ம் தேதியுடன் கொரோனா நாட்டை விட்டு போய்விடும் என்று கணித்தவர்

மும்பை

கொரோனா வைரஸ் மே -15 ம் தேதியுடன் நாட்டை விட்டு போய்விடும் என்று சொன்ன உலகப்புகழ் பெற்ற ஜோதிடர் பேஜன் தருவாலா, கொரோனாவுக்கே பலியான சம்பவம் அவரது அபிமானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலா உலகப்புகழ் பெற்றவர். பல பிரபலங்கள் இவரிடம் அவ்வப்போது தங்களது எதிர்காலம் குறித்து கேட்டறிவர். அவ்வப் போது நாடுகளின் எதிர்காலம், உலக அரசியலின் எதிர்காலம் என விரிவான பல முக்கியக் கணிப்புகளை வெளியிடுவது பேஜன் தருவாலாவின் வழக்கம்.

அதைப்போல, கொரோனா வைரஸ் கிருமி மே 15ம் தேதியுடன் இந்தியாவை விட்டு போய்விடும் என பேஜன் தருவாலா ஆரூடம் சொல்லி இருந்தார். இந்தியா இந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அடுத்த ஆண்டு பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்கும் எனவும் அவர் கூறியிருந்தார். இதுதான் பேஜன் தருவாலா சொன்ன கடைசி ஆரூடமும் கூட.

ஆனால், இறுதியில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 90 வயது நிறைந்த பேஜன் தருவாலாவுக்கு ஏற்கனவே முதுமை காரணாக உடலில் பல நோய்கள் இருந்ததால், கொரோனா எளிதில் தொற்றியதுடன் சிகிச்சையும் பலனளிக்கவில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments