Saturday, December 9, 2023
Home இந்தியா அந்தமானில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்

அந்தமானில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்

போர்ட் பிளேர்

அந்தமான் பகுதியில் ராணுவ உள்கட்டைமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியா உள்ளது.

572 தீவுக்கூட்டங்கள் அடங்கிய அந்தமான்-நிகோபார் பன்னாட்டுக் கடல் வழித்தடங்களின் அருகில் உள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து சீனாவுக்கு எண்ணெய் கப்பல்கள் அந்தமான் தீவுகள் வழியாகத்தான் செல்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவுப் பகுதியில் “அந்தமான் நிகோபார் கமாண்ட்” என்கிற படைப்பிரிவு 2001-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்த படைப்பிரிவாக விளங்குகிறது.

இந்த படைப்பிரிவை விரிவாக்கும் திட்டம் ஏற்கனவே இருந்த போதிலும் போதிய நிதி ஒதுக்கப்படாததாலும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததாலும் அத்திட்டம் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் லடாக்கில் சீனாவுடன் மோதலுக்குப் பின் அந்தமானில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியா இறங்கி உள்ளது. பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் கோகாசா, பாஸ் ஆகிய இடங்களில் கடற்படை விமான தளங்களில் உள்ள ஓடு பாதையை 10,000 அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய நில ஒதுக்கீடும், அனுமதியும் தற்போது உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ 5,650 கோடி மதிப்பீட்டில் வரும் 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டத்தை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் கமோர்த்தா தீவில் 10,000 அடி நீள ஓடுபாதையுடன் கூடிய விமான தளம் அமைப்பதும் இதில் அடங்கும்.

இத்திட்டம் 2027 ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பபடுகிறது. இதன் மூலம் கூடுதல் விமானங்கள், போர்க்கப்பல்கள் ஏவுகணைகள் ஆகியவற்றுடன் கூடுதல் எண்ணிக்கையில் படைவீரர்களையும் அங்கு தங்க வைக்க முடியும். இத்திட்டத்தால் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா தனது மேலாண்மையை நிறுவ முடியும். இது சீனாவின் நடவடிக்கைக்கு தடையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments