Saturday, March 25, 2023
Home இந்தியா அரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் 1-க்குள் காலி செய்ய பிரியங்கா காந்தி முடிவு

அரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் 1-க்குள் காலி செய்ய பிரியங்கா காந்தி முடிவு

டெல்லி

அரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவருக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எஸ்டேட்டுகள் இயக்குநரகம் (The Directorate of Estates) அனுப்பிய நோட்டீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தால் எஸ்.பி.ஜி பாதுகாப்பு, இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதை சுட்டிக்காட்டி, அவருக்கான லோதி குடியிருப்பு வீடு ஒதுக்கீடு ஜூலை 1ம் தேதி முதல் ரத்தாவதாகவும், ஆதலால் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரியங்கா விடுத்த கோரிக்கையை ஏற்று, கூடுதல் காலம் அங்கு வசிக்க பிரதமர் மோடி அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த செய்தியை பொய் செய்தி என்று ட்விட்டர் பதிவில் மறுத்துள்ள பிரியங்கா, அரசிடம் கோரிக்கை எதையும் வைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments