Sunday, March 26, 2023
Home விளையாட்டு ஹங்கேரி பார்முலா 1 கார்பந்தயம் - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

ஹங்கேரி பார்முலா 1 கார்பந்தயம் – இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

பார்முலா 1 கார்பந்தயத்தின் 3-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட் பிரி அங்குள்ள மொக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.63 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

1 மணி 36 நிமிடம் 12.473 வினாடிகளில் இலக்கை முதலாவதாக கடந்து 26 புள்ளிகளை அவர் தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டனின் 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 8.7 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தையும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3-வது இடத்தையும் (மெர்சிடஸ் அணி) பிடித்தனர். முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஹங்கேரி கிராண்ட்பிரியில் ஹாமில்டன் வெற்றியை ருசிப்பது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 2007, 2009, 2012, 2013, 2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு அவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பிரெஞ்ச் கிராண்ட்பிரியில் 8 முறை வெற்றி பெற்றவரான ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.

4-வது சுற்று போட்டி ஆகஸ்டு 2-ந்தேதி இங்கிலாந்தில் நடக்கிறது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments