Tuesday, March 21, 2023
Home உலகம் தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது பாகிஸ்தான்

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது பாகிஸ்தான்

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்த படி கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான், இப்போது கராச்சியில் தாவூத் இருப்பதாக முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு, சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம், எங்கள் நாட்டில் செயல்படும் 88 தீவிரவாத தலைவர்களுக்கு தடை விதித்துள்ளோம் எனக் குறிப்பிட்டு, அவர்கள் யார் ? யார்? என்ற பட்டியலையும் அளித்துள்ளது. இந்த பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கராச்சியில் தாவூத் வசிப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான், தாவூத் வசிக்கும் மூன்று வீடுகளின் முகவரியையும், சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் அளித்துள்ளது.

கராச்சியில் தாவூத் இப்ராஹிம் வசிப்பதை பாகிஸ்தான் ஒப்புகொண்டுள்ள நிலையில், அவரை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் வசிப்பது அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அவரது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். அங்கு இருந்த படி இப்போதும் இந்தியாவில் தினமும் குற்ற நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறார். எனவே தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தான், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஷா நவாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments