Tuesday, October 3, 2023
Home உலகம் தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது பாகிஸ்தான்

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது பாகிஸ்தான்

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்த படி கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான், இப்போது கராச்சியில் தாவூத் இருப்பதாக முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு, சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம், எங்கள் நாட்டில் செயல்படும் 88 தீவிரவாத தலைவர்களுக்கு தடை விதித்துள்ளோம் எனக் குறிப்பிட்டு, அவர்கள் யார் ? யார்? என்ற பட்டியலையும் அளித்துள்ளது. இந்த பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கராச்சியில் தாவூத் வசிப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான், தாவூத் வசிக்கும் மூன்று வீடுகளின் முகவரியையும், சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் அளித்துள்ளது.

கராச்சியில் தாவூத் இப்ராஹிம் வசிப்பதை பாகிஸ்தான் ஒப்புகொண்டுள்ள நிலையில், அவரை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் வசிப்பது அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அவரது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். அங்கு இருந்த படி இப்போதும் இந்தியாவில் தினமும் குற்ற நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறார். எனவே தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தான், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஷா நவாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments