Saturday, March 25, 2023
Home தமிழகம் தமிழ்நாட்டில் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி

தமிழ்நாட்டில் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் துவங்கியவுடன் பொதுப் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சில மாவட்டங்களில் துவங்கப்பட்டபோது தமிழ்நாடு எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னை தவிர்த்த பிற மண்டலங்களுக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து எல்லா வகையிலான பொதுப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்தந்த மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் துவங்கப்படவில்லை.

இந்த நிலையில் மாநில அரசு புதன்கிழமையன்று (இன்று)வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் திங்கட்கிழமையிலிருந்து அதாவது செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலத்திற்குள்ளும் பயணியர் ரயில் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு சென்னை புறநகர் ரயில் சேவைகளுக்குப் பொருந்துமா என்பது தெளிவாக்கப்படவில்லை. சென்னைக்குள் இயங்கும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஏழாம் தேதியிலிருந்து செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments