Friday, September 29, 2023
Home இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி

டெல்லி,

இந்தியாவில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட அனைவரும் இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி:

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரானது மக்கள் சார்ந்தது. கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களால் அவர்கள் பலம் பெறுகின்றனர். இந்த வைரசில் இருந்து நம்முடைய குடிமக்களை பாதுகாக்கும் பணியை நாம் தொடர வேண்டும். நமது கூட்டு முயற்சியானது பலரது உயிரை காப்பாற்றி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.

எப்பொழுதும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். முக கவசம் அணிய வேண்டும். கைகளை கழுவி கொள்ளுங்கள். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். ஒன்றிணைவோம். கொரோனாவுக்கு எதிராக நாம் வெற்றி பெறுவோம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments