Sunday, March 26, 2023
Home இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி

டெல்லி,

இந்தியாவில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட அனைவரும் இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி:

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரானது மக்கள் சார்ந்தது. கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களால் அவர்கள் பலம் பெறுகின்றனர். இந்த வைரசில் இருந்து நம்முடைய குடிமக்களை பாதுகாக்கும் பணியை நாம் தொடர வேண்டும். நமது கூட்டு முயற்சியானது பலரது உயிரை காப்பாற்றி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.

எப்பொழுதும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். முக கவசம் அணிய வேண்டும். கைகளை கழுவி கொள்ளுங்கள். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். ஒன்றிணைவோம். கொரோனாவுக்கு எதிராக நாம் வெற்றி பெறுவோம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments