Saturday, March 25, 2023
Home விளையாட்டு சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை - டோனி

சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை – டோனி

அபுதாபி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது.

இதில் கொல்கத்தா நிர்ணயித்த 168 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்து அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 51 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள் குவித்த கொல்கத்தா வீரர் ராகுல் திரிபாதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது:

மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியினர் 2-3 ஓவர்கள் அருமையாக பந்து வீசினார்கள். பிறகு இரண்டு மூன்று விக்கெட்டுகளை நாங்கள் அடுத்தடுத்து இழந்தோம். அந்த சமயத்தில் எங்களது பேட்டிங் நன்றாக இருந்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா நன்றாக பந்து வீசினார்.

பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். ஒரு அணியாக அந்த ரன் இலக்கை நாங்கள் எட்டிப்பிடித்து இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்களின் முயற்சியை பேட்ஸ்மேன்கள் வீழ்த்திவிட்டார்கள். கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகள் வரவில்லை. இதுபோன்ற தருணங்களில் வித்தியாசமாக விளையாட முயற்சிக்க வேண்டும். சற்று எழும்பி வரும் வகையில் வீசப்படும் பந்துகளை பவுண்டரியாக மாற்ற வழிமுறை கண்டறிய வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை என்றார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments