Wednesday, March 29, 2023
Home இந்தியா மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

புதுடெல்லி

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான், வயது 74, உடல்நலக் குறைவால், இன்று இரவு காலமானார்.

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பஸ்வான் உயிரிழந்ததாக, அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், தெரிவித்தார்.

பீஹாரைச் சேர்ந்த பஸ்வான், சக்யுக்தா சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தார். 1969ல் பீஹார் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், லோக் தள் கட்சியில் சேர்ந்தார்.கடந்த, 1977ல், முதல் முறையாக, ஜனதா கட்சி சார்பில், லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், ஏழு முறை தொடர்ந்து லோக்சபா, எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த, 2000ல் லோக் ஜன்சக்தி கட்சியைத் துவக்கினார். பெரும்பாலும், ஹாஜிபூர் தொகுதி எம்.பியாகவே இருந்த அவர், இறுதியில், ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தார். மத்தியில் அமைந்த அனைத்து கூட்டணி அரசுகளிலும் இடம் பெற்றிருந்த அவர், ஐந்து பிரதமர்களின் கீழ், அமைச்சராக பணியாற்றியுள்ளார். தலித் சமூகத்தினரிடையே, மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவராகத் திகழ்ந்தார். ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பஸ்வானின் மறைவால் தேசத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை யாராலும் நிரப்ப முடியாது என மோடி இரங்கல்

ராம்விலாஸ் பஸ்வான் தனது துறை சார்பில் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை செய்துள்ளார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தார் என வைகோ புகழாரம் சூட்டி உள்ளார்.

அமைச்சரின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது கட்சிக்கும் பீகார் மக்களுக்கும் பேரிழப்பாகும் என அமைச்சர் ஜெயகுமார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments