Thursday, December 7, 2023
Home பொது லூயி குளுக் என்ற அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

லூயி குளுக் என்ற அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஒவ்வொரு துறைக்ககான நோபல் பரிசுகள் கடந்த 5 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மிகப் புகழ்வாய்ந்த சமகால இலக்கியத்தில் முக்கியமானவராகக் கருதப்படும் லூயி க்ளுக் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். தெளிவான, எளிமையான, அழகான கவிதையின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் தனது இருப்பை லூயி வெளிப்படுத்தியுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி கூறியுள்ளது. 1993 ஆம் ஆண்டு புலிட்சர் விருதை வென்றுள்ள லூயிஸ், புனை கவிதைகள் உள்பட கட்டுரைகள் அடங்கிய 12 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments