Friday, November 24, 2023
Home இந்தியா ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக கடன் வாங்க முடியாது - மத்திய அரசு

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக கடன் வாங்க முடியாது – மத்திய அரசு

டெல்லி

ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக மத்திய அரசு கடன் வாங்க முடியாது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் வெளியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு கையை விரித்துவிட்டது.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இது தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திங்கள் கிழமையன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மீண்டும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திலும் மாநில அரசுகள், ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசோ, தம்மிடம் நிதி இல்லை, கடனும் வாங்க முடியாது. மாநில அரசுகள் கடன் வாங்க ஏற்பாடு செய்கிறோம் என கூறியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

மாநிலங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான கால அவகாசம் 50 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றன. மத்திய அரசால் தற்போதைய சூழ்நிலையில் ஏன் கடன் வாங்க இயலாது என்பது குறித்து மாநிலங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

இதனை 12 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மாநிலங்கள் தேவைப்பட்டால் வெளியே கடன் வாங்கலாம். கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதிதேவைப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விரைவில் உரிய பதில் தரும்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. உரிய காலத்தில் நிச்சயம் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments