Monday, December 4, 2023
Home தமிழகம் மூளை வளர்ச்சி இல்லாத காங்கிரஸ் கட்சி - போலீசில் புகார் கொடுத்ததால் வருத்தம் தெரிவித்த குஷ்பு

மூளை வளர்ச்சி இல்லாத காங்கிரஸ் கட்சி – போலீசில் புகார் கொடுத்ததால் வருத்தம் தெரிவித்த குஷ்பு

சென்னை

காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சித்தது விஸ்வரூபமானதால் நடிகை குஷ்பு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் வரை இருந்தவர் நடிகை குஷ்பு. திடீரென காங்கிரஸில் இருந்து பா.ஜ.க வுக்கு தாவி விட்ட குஷ்பு, டெல்லியில் பா.ஜ.க பொதுச் செயலாளர் சிடி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர், சென்னைக்கு வந்த குஷ்பு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க மூத்த தலைவர்களை அதிரவைக்கும் வகையில் “நான் ஒரு பெரியாரிஸ்ட்” என பிரகடனம் செய்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என சாடினார் குஷ்பு. குஷ்புவின் இந்த விமர்சனம், மாற்றுத் திறனாளிகளை கோபம் கொள்ள வைத்தது. இதனையடுத்து நடிகை குஷ்பு மீது தமிழகத்தின் பல போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து குஷ்பு தாம் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆழ்ந்த துயரத்தையும் வேதனையும் தருவதாகவும், அவசரத்தில் இந்த சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments