இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல் என தமிழக போலீசாருக்கு இன்டர்போல்”ரெட் அலர்ட்” செய்துள்ளது.
தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த ‘டான்’ ஜெமினி பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே மற்றொரு நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா தமிழகத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேபோல் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக இன்டர்போல் “ரெட் அலர்ட்” செய்துள்ளது.