Monday, October 2, 2023
Home இந்தியா இந்தியாவில் 75.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 75.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. சுமார் 1 லட்சத்தை தொடும் அளவுக்கு சென்ற தினசரி தொற்று தற்போது 60 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே தொடர்கிறது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரை விட அதிக எண்ணிக்கையிலானோர் தினமும் குணமடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 66 ஆயிரத்து 399 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66.6 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.97 லட்சத்தில் இருந்து 66.63 லட்சமானது.

மேலும் ஒரே நாளில் 55,722 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 75.50 லட்சத்தை கடந்தது. கொரோனா பாதித்த 7.72 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 579 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 8.59 லட்சம் பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9.50 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.52% குணமடைந்தோர் விகிதம் 88.26% ஆக உள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments