Wednesday, March 29, 2023
Home இந்தியா கேரளாவில் இன்று முதல் கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் திறப்பு

கேரளாவில் இன்று முதல் கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் திறப்பு

கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு கிடந்த அருங்காட்சியகங்களும், கடற்கரைகளும் இன்று முதல் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளன.

இன்று கேரள மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி மக்கள் இந்த இடங்களுக்கு வர விரும்புவார்கள் என்பதால் அவற்றை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் உரிய கொரோனா பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்த பின்னரே மக்கள் இந்த இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த மாத துவக்கத்தில் கேரளாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டன. அங்கு வரும் மக்களின் உடல் வெப்பத்தை கண்காணிக்கவும், சானிடைசர் போன்றவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகத்திற்கு வர எஸ்எம்ஸ் அல்லது ஆன்லைன் முன்பதிவு வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் வாகனங்களை ஒருமணி நேரம் மட்டுமே பார்க் செய்ய அனுமதிவழங்கப்படும்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments