Friday, September 29, 2023
Home இந்தியா கேரளாவில் இன்று முதல் கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் திறப்பு

கேரளாவில் இன்று முதல் கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் திறப்பு

கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு கிடந்த அருங்காட்சியகங்களும், கடற்கரைகளும் இன்று முதல் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளன.

இன்று கேரள மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி மக்கள் இந்த இடங்களுக்கு வர விரும்புவார்கள் என்பதால் அவற்றை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் உரிய கொரோனா பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்த பின்னரே மக்கள் இந்த இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த மாத துவக்கத்தில் கேரளாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டன. அங்கு வரும் மக்களின் உடல் வெப்பத்தை கண்காணிக்கவும், சானிடைசர் போன்றவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகத்திற்கு வர எஸ்எம்ஸ் அல்லது ஆன்லைன் முன்பதிவு வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் வாகனங்களை ஒருமணி நேரம் மட்டுமே பார்க் செய்ய அனுமதிவழங்கப்படும்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments