Wednesday, June 7, 2023
Home வர்த்தகம் கோழிப் பண்ணையில் 2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கல்

கோழிப் பண்ணையில் 2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கல்

பெரம்பலூர்

கோழிப் பண்ணைகளில் 2ஆயிரம் டன் பெரிய வெங்காயம் பதுக்கி வைத்திருந்ததாக வந்த தகவலின் பேரில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ60க்கும், தினசரி காய்கறி மார்க்கெட்டில் ரூ.80க்கும் விற்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெளிமாநிலத்திலிருந்து பெரிய வெங்காயத்தை ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.25க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் பயன்பாடில்லாத கோழிப்பண்ணைகளை வாடகைக்கு எடுத்து வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும், வெங்காய தட்டுப்பாடு இருக்கும் போது வெங்காயத்தை கூடுதலாக விலைக்கு விற்பனை செய்ய வியாபாரிகள் திட்டமிட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில், தோட்டக்கலை துணை இயக்குநர் பாத்திமா தலைமையிலான அலுவலர்கள் இரூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் நேற்று அதிரடி ஆய்வு செய்தனர். அங்கு அடுக்கி வைப்பட்டு இருந்த வெங்காயத்தை சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகளிடம், எதற்காக வெங்காயத்தை வைத்துள்ளீர்கள் என கேட்டதற்கு, விதைக்காக வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்படும். இது சட்ட விரோதமான செயல் என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்து சென்றனர்.

இதுகுறித்து வேளாண்மை துறை இணை இயக்குநர் கருணாநிதியிடம் கேட்டபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது பற்றி கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பதுக்கல் வெங்காயம் என தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கூறியதாவது: பாஜக கட்சியை சேர்ந்த வெங்காய வியாபாரிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 8இடங்களில் பயன்பாடில்லாத கோழிப்பண்ணைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளனர். பொது மக்களின் அத்தியாவசிய உணவு பொருளான வெங்காயத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments