Wednesday, March 29, 2023
Home இந்தியா அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின்

அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின்

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வே நாயக் மரண வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வே நாயக் 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையதாக அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்கு சென்று மும்பை போலீசார் அவரை இந்த வழக்கில் கைது செய்தனர். ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் முறையிட்டார். அவரின் ஜாமினை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இதனை எதிர்த்து அர்னாப் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சந்திரசூட் அமர்வு ஜாமின் மனுவை புதன்கிழமை விசாரித்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசுகள் சட்டத்தை மீறும்போது உச்சநீதிமன்றம் அதனை தடுக்கும் என்று கூறினர். உயர்நீதிமன்றங்கள் தங்கள் கடமைகளை செய்வதில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments